சென்னையில் நடைபெறவுள்ள மானிய ஸ்கூட்டர் விழாவை எம்.எல்.ஏ. கருணாஸ் புறக்கணித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுபயணமாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை வந்துள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரை சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள மானிய ஸ்கூட்டர் விழாவை எம்.எல்.ஏ. கருணாஸ் புறக்கணித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் நடுநிலையாக பிரதமர் செயல்படாததை கண்டித்து எம்.எல்.ஏ. கருணாஸ் விழாவை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.