மும்பை: பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி(54) துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீதேவி மறைவிற்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த ஸ்ரீதேவியின், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அமெரிக்க துணை தூதரகம் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது நடிப்பால் ஈர்த்தவர் ஸ்ரீதேவி என தெரிவித்துள்ளது.