சென்னை : தண்டையார்பேட்டையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று தினகரன் வருகை தந்தார்.
மாலை 4 மணிக்கு தொகுதி மக்களை நேரில் சந்தித்து. நன்றி தெரிவிக்க உள்ளார். மேலும் குடிநீரில் எண்ணெய் , கழிவு நீர் கலந்து வருவதால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக அறியப்பெற்றேன் என்று கூறிய அவர் ஆர்.கே.நகரில் எந்தெந்த வார்டுகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டது.
இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்க சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநருக்கு கடிதம் வழியே டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.