நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆய்வுச்சான்று சமர்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ஜிதேந்திர சிங்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும்  திட்டம் உள்ளது. இத்திட்டம்
நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆய்வுச்சான்று சமர்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுதில்லி:  தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும்  திட்டம் உள்ளது. இத்திட்டம் குறித்து மக்களவையில் கேரள எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ்  எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங்

நியூட்ரினோ திட்டத்துக்கு புதிய சுற்றுச்சூழல் ஆய்வுச்சான்று சமர்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கப்படும் நியூட்ரினோ திட்டம் பற்றி தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி, அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என்று கூறினர்.  

தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமம், போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அங்கு அதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன.

இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்து குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com