சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் பலி

சிரியாவின் இட்லிப் நகரில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பரிதாபமாக பலியாயினர்.
சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் பலி

இட்லிப்: சிரியாவின் இட்லிப் நகரில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பரிதாபமாக பலியாயினர்.

சிரியாவில் அரசு படைகளுக்குக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சிட்லிப் நகரை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கார் வெடி குண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர். இதில் 18 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com