மியான்மர் - இந்திய எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் மேற்குப் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்யூ நகரில் தான் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த விவரங்களும் வெளியாகிவில்லை.