பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“பொங்கல் விழாவில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிமை கிடைத்திட வாழ்த்துகிறேன். தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.