சென்னை: திமுக, அதிமுகவால் இனி தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வரும் துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிகிறது. தினகரன் வெற்றி பெற்றதற்கு திமுகதான் காரணம் என்றவர் திமுக விலை போகியுள்ளது என்றார்.
இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என குருமூர்த்தி பேசினார்.