பள்ளிகள், கல்லூரிகள் இன்று செயல்படும்: பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் இன்று வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். 
பள்ளிகள், கல்லூரிகள் இன்று செயல்படும்: பள்ளி கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் இன்று வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. 

அரசு தரப்பில் இது பற்றி விசாரித்தபோது, கடந்த ஆண்டு வெளியான வாட்ஸ் அப் தகவலை யாரோ பரப்பி இருப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறுகையில், தமிழகத்தில் இன்று புதன்கிழமை (ஜன.17) வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்று தெரிவித்தார். 

அதுபோல், கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று  உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com