சென்னை: பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கென விண்ணப்பம் பெற்று பிப்ரவரி 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் களஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் கார்டு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.