அமெரிக்காவின் அலாஸ்கா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து மத்திய கடலோர மற்றும் வடகிழக்கு தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வாளர் கூறுகையில்
கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி கட்டாயம் செல்ல வேண்டும், மேலும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:31 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.