ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்த முடியாவிடில் பொதுவாழ்க்கையை விட்டுகூட விலகுவோம் என்று அமைச்சர் உதயகுமார் இன்று தெரிவித்துள்ளார். மேலும் மேலூரில் இன்று அவர் பேசும் போது பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.