மும்பை: மகாராஷ்ட்ராவின் கந்தாலா பகுதியில் மதுரை விரைவு ரயிலின் சரக்குப் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிராவின் கந்தாலா பகுதியில் மதுரை விரைவு ரயிலின் சரக்குப் பெட்டி இன்று அதிகாலை 3.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில், அதிர்ஷ்டவசமாக எந்தவித அசாம்பாவிதங்களும் நிகழவில்லை என்றும் தடம் புரண்ட சரக்குப் பெட்டி ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக சரி செய்யப்பட்டதால் ரயில் சேவையில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.