2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பரபரப்பு பேச்சு

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என
2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பரபரப்பு பேச்சு


திருவனந்தபுரம்: 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சசி ரூர் கலந்துகொண்டு பேசுகையில், வரும் 2019- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், நமது நாட்டின் ஜனநாயம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலைப்பை உருவாக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானைப் போலவே, சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கப்படாத ஒரு பாகிஸ்தானை உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’. 

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும்” என சசி தரூர் கூறியுள்ளார்.

சசி தரூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறுகையில், சசி தரூரின் பேச்சுக்கு காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். 

பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமான காங்கிரஸ், மீண்டும் இந்தியாவை தாழ்த்தி இந்தியாவின் இந்துக்களை குறைகூறுகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com