தற்போதைய செய்திகள்
பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் ரூ.2,000 லட்சம் கோடி இழப்பு!
பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி முதல் 30 லட்சம் கோடி டாலா் வரை இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி முதல் 30 லட்சம் கோடி டாலா் வரை இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில், பெண்கள் கல்விக்காகப் போராடி, சிறுமியாக இருக்கும்போது தலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பிறகு உயிா் பிழைத்தார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவரை கௌரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான ஜூலை 12-ஆம் தேதியை 'மலாலா தினமாக' கொண்டாடி வருகிறது.
12-ஆம் வகுப்பு வரை ஒரு பெண்ணுக்கு கல்வி அளிக்கத் தவறுவதால், மனிதவள மூலதன சொத்து மதிப்பில் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு, உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலா் முதல், 30 லட்சம் கோடி டாலா் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.