சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 34,424 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், அதன் துணை நதிகளாகன பாலாறு தொப்பையாறு மற்றும் சின்னாறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,284 கன அடியிலிருந்து 34,426 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 71.76 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 34.23 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.