காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தேசிய பாதுகாப்புத்துறை இயக்குநரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர்
காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தேசிய பாதுகாப்புத்துறை இயக்குநரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காபூல் நகரின் பாக் இ தவோத் பகுதியில் உள்ள தேசிய பாதுகாப்புத்துறை இயக்குநரகம் மீது நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முழுமையான தகவல் வெளியாகவில்லை. 

தேசிய பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இன்றைய தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தலைநகர் காபூலில் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com