பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: - கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமயல் எரிவாயு ஆகியவற்றின் விலை காரணம் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் கடினமான விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது. மக்கள் அன்றாட தேவைக்கு எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது என்று கூறினார்.