நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றும்: அமித் ஷா நம்பிக்கை

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் விரைவில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும்
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றும்: அமித் ஷா நம்பிக்கை

குவாஹாட்டி:  நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் விரைவில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றறது. மாநில அரசும், டாடா அறறக்கட்டளையும் இணைந்து மாநிலத்தில் 19 மருத்துவமனைகளை கட்டவுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறறகு அமித் ஷா பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதாரத்தில் வளா்ச்சி கண்டிருந்தன. 

ஆனால், இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி, இந்தப் பகுதி மாநிலங்களை வளா்ச்சியில் பின்தங்க வைத்து விட்டது.

இந்த நிலையில், பிரதமா் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களால், நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றற உள்ளன. மோடி எப்போதும் வடகிழக்குப் பிராந்தியத்தை அஷ்ட லட்சுமியாகக் கருதுகிறார். ஆகவே, இங்கு சாலை, ரயில் போக்குவரத்து, தகவல் தொடா்பு, தொழில் துறைற வளா்ச்சி, கல்வி ஆகியவற்றைற மேம்படுத்துவதற்கு அவா் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று அமித் ஷா கூறினார்.

நிகழ்ச்சியில், அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்தா சோனோவால், அருணாசலப் பிரதேச முதல்வா் பெமா காண்டு, டாடா அறறக்கட்டளையின் தலைவா் ரத்தன் டாடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com