ஜம்மு : காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நேரிட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே வெகு நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்ட வருகின்றனர்.
ஒருமித்த கருத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நிலையில், அதை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.