ஒடிஷாவில் இந்தாண்டு நவம்பர் மாதம் உலகக்கோப்பை ஹாக்கிபோட்டி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்பாக ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: -
ஹாக்கி ஏற்கனவே இந்தியாவின் அதிகாரபூர்வமற்ற தேசிய விளையாட்டாக உள்ளது. ஒடிஷாவில் வரும் நவம்பரில் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் தகுதி பெற்றுள்ளது,
எல்லோரும் இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிந்துள்ள அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் இது எங்கள் தேசிய விளையாட்டு என்று அறிவிக்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, நம் நாட்டின் ஹாக்கி ரசிகர்களின் கோரிக்கையாக ஏற்றுக் கொண்டு,- ஹாக்கி தேசிய விளையாட்டு என்று அறிவிக்கப்பட வேண்டும். இது நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த பெரும் ஹாக்கி வீரர்களுக்கு பொருத்தமாக இருக்கும், என்று குறிப்பிட்டுள்ளார்.