ஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே புதிய விமான சேவை 

தூத்துக்குடி- பெங்களூரு இடையிலான புதிய விமான சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல்
ஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே புதிய விமான சேவை 

தூத்துக்குடி:  தூத்துக்குடி- பெங்களூரு இடையிலான புதிய விமான சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு போய் சேரும். இதனால் தூத்துக்குடி விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்கம் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com