சீனாவில் வரும் ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடக்க உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளார். அங்கு நடைபெற உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். முன்னதாக அவர் மார்ச் 28-ம் தேதி ஜப்பான் செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. அங்கிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்ல உள்ளார்.
டோக்லாம் விவகாரம் தொடர்பாக சுஷ்மாசுவராஜ் கடந்த ஆண்டு நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் எல்லையில் சீன ராணுவம் பின்வாங்கியது, எனினும் குறிப்பிட்ட பகுதி இந்தியாவின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.