'தேனி மாவட்டம் குரங்கணி காட்டில் மலையேற்றத்திற்காக சென்ற 36 மாணவ மாணவிகளில் ஒன்பது பேர் காட்டுத் தீயில் சிக்கி இறந்தனர்.
மீட்கப்பட்ட 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக தற்போது உயர்ந்துள்ளது. மதுரை தனியார் மருத்துவமனையில் உள்ள திவ்யா விஸ்வநாதன் இன்று உயிரிழந்தார்.
இனி வரும் காலங்களில் மலையேற்றத்திற்கு குரங்கணி காட்டுப் பகுதிக்கு செல்வோரின் பாதுகாப்பிற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது