நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கார் மீது மினி லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் ஈ.சி.ஆர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் பின்னால் சென்றுகொண்டிருந்த மினி லாரி வேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் இருந்த 3 பேர் சம்பவ உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 3 பேரும் கேரளாவை சேர்ந்த திலீப், ஆரிசாமி, கிருஷ்ணவேணி என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.