சென்னை: ஜெயலலிதா முதல்வராக முழு காரணம் நடராஜன் தான் என்று ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலோகா கூறினார்.
சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா முதல்வராக ம.நடராஜன் தான் முழு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என தெரிவித்தார்
அப்போதைய தென்காற்காடு மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா இருந்தபோது, நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்