பாலியல் புகார்: தில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் கைது 

தில்லி ஜே.என்.,யு. பல்கலை. பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக போலீசார் இன்று கைது செய்தனர்.
பாலியல் புகார்: தில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் கைது 

தில்லி ஜே.என்.,யு. பல்கலை. பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக போலீசார் இன்று கைது செய்தனர்.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அதுல் ஜேஹரி, இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. நேற்று இரவு பல்கலை. மாணவர்கள் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். அதுல் ஜோஹரியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வசந்த்கஞ்ச் போலீஸ் ஸ்டேசனனை முற்றுகையிட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே ஏராளமான போலீசார் குவிந்தனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. லேசான தடியடியும் நடந்தது. விவகாரம் பெரிதானதையடுத்து நேற்று இரவே பேராசிரியர் அதுல் ஜோஹரி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com