மதுரை: விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை மதுரை திருமங்கலம் அருகே ஏ.பாறைப்பட்டியில் போலீஸார் கைது செய்தனர்.
விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு செல்லும் வழியில் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொளத்தூர் மணி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே, ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்த செங்கோட்டை சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.