திருவெறும்பூரில் உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காமராஜுவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா உஷா தம்பதியை ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தார். இதில் இருச்சக்கர வாகனத்துடன் கீழே தம்பதியினர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் உஷா சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உஷா உயிரிழந்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காமராஜுவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.