மணல் குவாரிகளை திறக்க இன்று டெண்டர் விடப்படும்: முதல்வர்

தமிழகத்தில் மணல் குவாரிகள் இன்று முதல் டெண்டர் விடப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார். 
மணல் குவாரிகளை திறக்க இன்று டெண்டர் விடப்படும்: முதல்வர்

சென்னை : தமிழகத்தில் மணல் குவாரிகள் இன்று முதல் டெண்டர் விடப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார். 

மணல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
தஞ்சை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  மணல் தட்டுப்பாடை தடுக்கவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த மணல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும். புதிய மணல் குவாரிகளை திறந்து, மணல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com