ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: வேதாந்தா நிறுவன பங்குகள் 6 சதவீதம் வீழ்ச்சி

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: வேதாந்தா நிறுவன பங்குகள் 6 சதவீதம் வீழ்ச்சி

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக, வேதாந்தா நிறுவன பங்குகள் 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. 

இன்று காலையில், வர்த்தகம் தொடங்கியபோது, 258 ரூபாய் 75 காசுகளாக இருந்த வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள், காலை 11.16 மணி நிலவரப்படி, 255 ரூபாயாக சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடரவே வாய்ப்பிருப்பதாக, பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.  ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவன பங்குகள், 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு  வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com