தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கினார். மேலும் டிஜிபி ராஜேந்திரனும் ஆளுனருடன் சந்தித்து பேசினார். தூத்துக்குடி போராட்டம், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விளக்கினார்.