தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது - பிரேமலதா விஜயகாந்த்

துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது என்றும் இதற்காக முடக்க வேண்டியது  இணையதளத்தை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது - பிரேமலதா விஜயகாந்த்

துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது என்றும் இதற்காக முடக்க வேண்டியது  இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போராட்டம் மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தூத்துக்குடியே போர்க்களமானது.
துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தேமுதிக தலைவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டன் தெரிவித்துள்ளார். அதில், துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது என்றும் முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com