ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்து மூன்று நாட்களாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரும் கலவரத்தால் காவல்துறையினருக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 25, 26 மற்றும் 28-ம் தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 5 முதல் 7-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.