தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 3.99 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் மதிப்பு, 258.75 ரூபாயாக குறைந்தது. இதுபோல் தேசிய பங்குச் சந்தையிலும் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.15 சதவீதம் குறைந்து 346.68 ஆக சரிந்தது. கடந்த 10 மாதங்களில் இல்லாதவகையில் வேதாந்தா குழுமத்தின் பங்குகள் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகள் குறித்து வேதாந்தா நிறுவனத்திடம் மும்பை பங்குச்சந்தை விளக்கம் கேட்டுள்ளது.