நாட்டுக்காக மிக கடுமையாக பாடுபடும் பிரதமரை தந்ததில் பாஜக பெருமை கொள்கிறது: அமித்ஷா

உலகிலேயே ஒரு நாளைக்கு 15 மணி முதல் 18 மணி நேரம் வரை வேலைசெய்யும் ஒரே பிரதமர் மோடிதான் நாட்டுக்காக
நாட்டுக்காக மிக கடுமையாக பாடுபடும் பிரதமரை தந்ததில் பாஜக பெருமை கொள்கிறது: அமித்ஷா

உலகிலேயே ஒரு நாளைக்கு 15 மணி முதல் 18 மணி நேரம் வரை வேலைசெய்யும் ஒரே பிரதமர் மோடிதான் நாட்டுக்காக மிக கடுமையாக பாடுபடும் பிரதமரை தந்ததில் பாஜக பெருமை கொள்கிறது   என்று அமித்ஷா கூறியுள்ளார். 

பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பாஜக ஆட்சிகுறித்து பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பது மட்டுமே கொள்கையாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு நாட்டில் இருந்து ஏழ்மையை அகற்ற வேண்டும் என்ற நோக்கோடு உழைத்துக் கொண்டிருக்கிறது. 

எனவே வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். நாட்டில் வளர்ச்சி மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மோடி அறிமுகப்படுத்தியுள்ளார் எதிர்க்கட்சியினர் மோடி அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே பொய் பிரசாரம் செய்து வருகின்றன. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 20 மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளதோடு, 65 சதவீத மக்களுக்கு சேவை செய்வதற்கும் காரணம் மோடிதான் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com