மும்பை விமானநிலையத்தில் முக்கிய ஓடுபாதை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விமானநிலையத்தின் முக்கிய ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்க உதவும் கருமுறை (ILS) மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.