சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்து வயது
சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: பினராயி விஜயன்


திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

இதுகுறித்து பினராயில் விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம். கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எந்த தடை மனுவையும் தாக்கல் செய்யாது. 

சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம். சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். 

மேலும், இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பிரச்னையை ஏற்படுத்தாமல் இருந்தால், சுமூக தீர்வினை எட்டலாம் என்றவர் இந்து தலைவர்களுடன் முதலில் தேவசம் போர்டுகலந்தாலோசிக்கட்டும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com