திருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே அகஸ்தீஸ்வரர் கோயிலில் பெருமாள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே அகஸ்தீஸ்வரர் கோயிலில் பெருமாள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெண்போட்டில் அகஸ்தீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள இடத்தை சுத்தம் செய்தபோது சிலைகள் கிடைத்தன. கற்சிலைகள்  மீட்கப்பட்டு அகஸ்தீஸ்வரர் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. திருப்போரூர் வட்டாட்சியர் ராஜ்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிலைகள் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் நேரில் விசாரணை நடத்த வேண்டுமென கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com