ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும் நடிகர்கள் எங்கள் கட்சியில் சேர்வதற்கு எந்த தடையும் இல்லை என பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சியாளர்களுக்கு பதவியில் இருக்கும் வரை கொள்ளை அடித்துவிட வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர் என்றும் அதிகம் ஊழல் நடைபெறும் மாநிலத்தில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என்றார்.
தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்றும், ஆனால் மத்திய அரசின் அழுத்தங்களுக்குட்பட்டு அவர் செயல்படுகிறார்.
ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாமக தயாராக உள்ளது என்றும் நடிகர்கள் எங்கள் கட்சியில் சேர்வதற்கு எந்த தடையும் இல்லை என அன்புமணி தெரிவித்தார்.
மேலும், சபரிமலையில் ஒரு ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது, அதில் தலையிடக்கூடாது, பாரம்பரிய பழக்க, வழக்கத்தை மாற்றக் கூடாது என அன்புமணி கூறினார்.