மதுரை: இனி வரும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை அண்ணாவின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், இனி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது. உள்ளாட்சி துறையில் ஊழல் என கூறும் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஸ்டாலின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; எங்களிடம் மக்கள் படை, இளைஞர் படை, மாணவர் படை உள்ளது. ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருகிறோம்.
நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம். வாருங்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிரூபிப்போம் என்று கூறினார்.