திருப்பதி: உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் என சாமி தரிசனம் செய்த பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து குடும்பத்துடன் கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு இரவு தங்கிய முதல்வர், இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பூஜையில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றார்.
இதேபோன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது தமிழக முதல்வர் பழனிசாமியும் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடும் சந்தித்து பேசிக்கொண்டனர். இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்தோம் என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.