பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சி!

சதீஷுக்கு நடைபெற்ற விபத்து குறித்தும் அவருடைய பெற்றோருக்கு தான் முன்னதாக தெரிவித்து விட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார். மாரியப்பன்
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சி!

கடந்தாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்ட தமிழரான மாரியப்பன் தங்கவேலுவை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று மாரியப்பன் புகார் கூறியுள்ளார். ஓமலூர் பெரியகடம்பபட்டியில் நடைபெற்ற விபத்தொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்து மாரியப்பனின் காரை இடித்த சதீஷ் என்ற வாலிபர் மரணம் அடைந்ததால். சதீஷின் மரணத்துக்கு மாரியப்பன் தான் காரணம் எனக்கூறி மாரியப்பனிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயல்வதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சதீஷ் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து தனது காரில் மோதியதில் கார் சேதமடைந்துள்ளதாக தான் முன்னரே புகார் அளித்திருப்பதாகவும். சதீஷுக்கு நடைபெற்ற விபத்து குறித்தும் அவருடைய பெற்றோருக்கு தான் முன்னதாக தெரிவித்து விட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார். மாரியப்பன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com