அண்ணாநகரில் இயங்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் SC மற்றும் OBC மாணவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவிருக்கிறார்களாம். டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்குத் தயாராகும் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப் படவிருக்கும் 50 மாணவர்களுள் 35 இடங்கள் SC மாணவர்களுக்கும் 15 இடங்கள் OBC மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட வகுப்புகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப நிலை, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தகுதிகளின் அடிப்படையில் இந்த 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வான மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் வென்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கு பயில விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதியும், டிஎன்பிஎஸ்சி பரீட்சைகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மே மாதமும் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விவரங்களைப் பெற 6459722, 45522227 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.