சுவாமி விவேகானந்தரின் 154-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (ஜன.12) நடைபெற்றன.
சுவாமி விவேகானந்தரின் 154-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (ஜன.12) நடைபெற்றன.
விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவை ஆசான் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்தினர்.
விழாவை முன்னிட்டு ஏற்கெனவே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.ராமநாதன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரியும், தமிழ் துறைத் தலைவருமான பொன்.ரமேஷ் குமார், நிகழ்ச்சிக்கு நன்றி உரை வழங்கினார்.
விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.