ஐ.எஸ். தலைவனின் உத்தரவு என்ன?

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில்
ஐ.எஸ். தலைவனின் உத்தரவு என்ன?

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்த் இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான, மொசூல் நகரம், சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில் அல் பாக்தாதி கொல்லப்பட்டான் என்ற செய்திகள் வெளி வந்தன. ஆனால் அவன் சிரியாவில் ரக்கா பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.  அதற்குப் பின், அல் பாக்தாதி ஒருமுறை மட்டுமே வெளியில் வந்துள்ளான்.

இந்நிலையில், இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும், 'மீடியா' மையங்கள் உட்பட, எதிரிகள் அனைவரையும் எரித்து கொல்லுங்கள், என, பயங்கரவாதிகளுக்கு அல் பாக்தாதி உத்தரவிட்டு உள்ளான். ஐ.எஸ்., சமூக வலைதளங்களில், அல் பாக்தாதியின் பேச்சு பதிவான, 'ஆடியோ சிடி' ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டது: ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களான நீங்கள் தான், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்; இஸ்லாத்தை காப்பாற்றும் வீரர்கள்; தோல்வியை கண்டு துவள வேண்டாம், தாக்குதலை தீவிரப்படுத்துங்கள். இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும் அனைத்தையும எரித்து கொல்லுங்கள். இஸ்லாமிய மைந்தர்கள், அல்லாவுக்காக, தங்கள் உயிரையும், உடலையும் தொடர்ந்து தியாகம் செய்வார்கள்’ என்று கூறினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com