‘கவிதை உறவு’ இலக்கிய பரிசுப் போட்டி! ஏப்ரல் 10 க்குள் படைப்புகள் அனுப்பலாம்.

நூல்களை, ""ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், எண்.420இ, மலர் காலனி, அண்ணாநகர், சென்னை-600040'' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நூல்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதியாகும்.
‘கவிதை உறவு’ இலக்கிய பரிசுப் போட்டி! ஏப்ரல் 10 க்குள் படைப்புகள் அனுப்பலாம்.

கவிதை உறவு இலக்கிய பரிசுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.மரபுக்கவிதை, 2.புதுக்கவிதை, 3.மனிதநேயம்-வாழ்வியல், 4.சிறுகதை, 5.செவ்வியல் இலக்கிய கட்டுரைகள், 6.பொதுகட்டுரைகள், 7.குழந்தை இலக்கியங்கள், 8.குறுநாவல், 9.கல்வியியல்/இளைஞர்நலம்/ஆளுமை மேம்பாடு, 10. ஆன்மிகம்/மதநல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெறும்.

சிறந்த நூல்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000.

நூல்கள் 2016-ஆம் ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் 3 பிரதிகளை அனுப்ப வேண்டும். நூல்கள் கிடைத்த விவரங்களை அறிந்து கொள்ள சுயமுகவரியிட்ட அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டும்.


நூல்களை, ""ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், எண்.420இ, மலர் காலனி, அண்ணாநகர், சென்னை-600040'' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நூல்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com