புதுப்பொலிவில் புத்திரன்கோட்டை பரமன்!

காஞ்சி மாவட்டம் செய்யூர் வட்டத்தில் மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் புத்திரன் கோட்டை கிராமத்தில் உள்ளது....
புதுப்பொலிவில் புத்திரன்கோட்டை பரமன்!

காஞ்சி மாவட்டம் செய்யூர் வட்டத்தில் மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் புத்திரன் கோட்டை கிராமத்தில் உள்ளது மிகப் பழமையான அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். 

அகத்திய முனிவருக்கு இறைவன் காட்சிதந்து அருளிய தலங்களுள் இதுவும் ஒன்று. சோழமன்னனின் புத்திரதோஷம் நீக்கி புத்திரப்பேறு அளித்ததால் இத்தலத்திற்கு புத்திரன்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டதாக தகவல் உண்டு. பண்டை தமிழகத்தை ஆட்சி புரிந்த பாண்டிய, பல்லவ மற்றும் சோழ மன்னர்களால் இக்கோயிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்ட தகவல்களை கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது.

காலப்போக்கில் சிதிலமடைந்து வழிபாடு குன்றிய நிலையில் கோவை பூஜ்யஸ்ரீ ஸ்வாமிதயானந்த சரஸ்வதியிடம் சந்நியாச தீட்சைப் பெற்ற ஸ்வாமினி ஸ்திரானந்த சரஸ்வதி அவர்கள் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சேவா டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் தமிழ்நாடு அரசு இந்து சமய நிலைய ஆட்சித்துறை அனுமதி பேரில் கிராம மக்கள் ஒத்துழைப்புடனும், சேவார்த்திகள் பங்கேற்புடனும், மயிலை
சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் கே.வி.சேஷாத்ரிநாத சாஸ்திரிகளின் வழிகாட்டுதலின் படியும் ஆலய புணர்நிர்மாணப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செவ்வனே நிறைவேற்றியுள்ளது கண்கூடு. ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூர்ணோத்தாரண ஆஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் ஆக 31-ம்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30-க்குள் நடைபெறுகின்றது. பூக்வாங்க யாகசாலை பூஜைகள் ஆக 29-ல் தொடங்குகின்றது. புத்திரன் கோட்டை செல்ல மதுராந்தகம் மற்றும் சூணாம் பேட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. 

தகவல்களுக்கு: 9840953704 / 8012851859 / 8489141853.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com