சென்னை, மக்காரம் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் புஷ்கர கும்பாபிஷேகம் மற்றும் 23-ம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெறுகின்றது.
நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 16-ம் தேதி 01.9.2017 வெள்ளிக்கிழமை தசமி திதி, பூராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக சந்திர ஓரையில் துலாம் லக்னத்தில் மக்காரம் தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய ஜீர்னோதாரன மஹா கும்பாபிஷேகம் (12-ம் வருட புஷ்கர கும்பாபிஷேகம்) நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்பாளின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.