இந்த வாரம் நன்மை அடையக்கூடிய ராசிக்காரர்கள் யார் யார்?

தினமணி ஜோதிடர் அவர்கள் இந்த வாரப் (டிசம்பர் 29 - ஜனவரி 4) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடையுங்கள். 
இந்த வாரம் நன்மை அடையக்கூடிய ராசிக்காரர்கள் யார் யார்?

தினமணி ஜோதிடர் அவர்கள் இந்த வாரப் (டிசம்பர் 29 - ஜனவரி 4) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடையுங்கள். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வாழ்க்கையில் சிறு சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். துணிந்து நீங்கள் செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பன்களைத் தரும். பொருளாதாரம் சீராக இருக்கும். அதே சமயம் மற்றவர்களுக்கு உங்கள் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். என்றாலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். இதனாலேயே புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமான இருக்கும். உழைப்புக்கேற்ற பலனை அடை வதில் சில தடங்கல்கள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்குவார்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். கலைத்துறையினர் உழைப்புக்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களின் உதவியுடன்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். 

மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் குறையும். ஆகவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம். 

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29,30.

சந்திராஷ்டமம்: இல்லை.


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும். கையிலுள்ள பொருள்களை இழக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் உண்டாகும். ஆன்மிகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நடைபெறும் வழக்கில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படும். ஆகவே மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களின் நல்ல பலனைக் காண்பீர்கள். கால்நடைகளின் மூலம் வருமானத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலால் கவலை அடைவீர்கள். தொண்டர்களை சமாதானப் படுத்த முயல்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெண்மணிகள் உடல்நலனில் கவனம் செலுத்தவும். கணவரின் ஆதரவு நன்றாக இருக்கும். மாணவமணிகள் கடினமாக உழைக்க வேண்டிவரும். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொண்டு
பிரச்னைகளைத் தவிர்க்கவும். 

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29,31. 

சந்திராஷ்டமம்: இல்லை.


மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) 

செய்தொழிலில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியமும் மனநிலையும் பலப்படும். கடுமையாக உழைத்து செயலாற்ற வேண்டிவரும். வருமானம் உயரும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரத் தொடங்கும். ஆனால் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். வியாபாரிகள் மறைமுக எதிர்ப்புகளால் தொல்லை அடைவீர்கள். சரக்கு வாகன வகையில் செலவு செய்ய நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். இதனால் புதிய குத்தகைகளை எடுக்க நினைப்பீர்கள். 

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதையும் யோசித்துச் செய்யவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30,31. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். வருமானம் பெருகும்.  சிலர் புதிய வீடு மாற்றம் செய்வீர்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு  நன்மை செய்வார்கள். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் கருணையுடன் நடந்து கொள்வார்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக முடியும். வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகள் பெருகும். 

அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து கட்சி மேலிடத்தைக் கவருவீர்கள். தொண்டர்களை அனுசரித்துச் சென்றால் மேலும் நன்மை அடையலாம். கலைத்துறையினர் செய்தொழிலில் முன்னேற்றமடைவீர்கள். ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு சுமுக நிலையை உருவாக்கவும். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் நற்பெயர் வாங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். 

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29,2. 

சந்திராஷ்டமம்: இல்லை.


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். பொருளாதார வளம் பெருகும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு அந்தஸ்து உயரும். பயணங்கள் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேலதிகாரிகள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்களின் கோரிக்கைகளைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பெறக் கடுமையான போட்டிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30,1. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.  எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதிற்கினிய செய்திகள் தூரதேசத்திலிருந்து வந்து சேரும். உடன்பிறந்தோர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடிவடையும்.  கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்களையும் கால்நடைகளையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று மேலும் நன்மை அடைவீர்கள். கலைத்துறையினர் செய்தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். ரசிகர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். 

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1,2. 

சந்திராஷ்டமம்: 29.


துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) 

பண வருவாய் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளைத் தெளிவுடன் செய்து முடிப்பீர்கள்.சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பாராக பயணங்களைச் செய்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு எடுத்த முயற்சிகளை மறுபரிசீலனை செய்யவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சீராக இருக்கும். கால்நடைகளாலும் வருமானத்தைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் நன்மைகளை அடைவீர்கள். உங்கள் திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேறும். கலைத்துறையினர் ரசிகர்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். பிள்ளைகளால் எதிர்காலத்திற்காகச் சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். 

மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1,3. 

சந்திராஷ்டமம்: 30,31.


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்களின் ஆற்றல் வெளிப்படும். எண்ணங்கள் ஈடேறும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். எதிலும் நிதானமாகச் செயல்படவும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி  உயர்வு இரண்டும் கிடைக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய வாரமிது. வியாபாரிகள் புது புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாயிகள் கடினமாக உழைத்து விளைச்சலைப் பெருக்குவார்கள். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.  

அரசியல்வாதிகளுக்கு சில எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு அதனால் பங்கம் வராது. ஆகையால் கட்சி தலைமையின் கவனத்தைக் கவர முயற்சி செய்யுங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதிலும் பணவரவிலும் தாமதம் ஏற்படும். ரசிகர்கள் சற்று அலட்சியமாக நடந்து கொள்வார்கள். பெண்மணிகளுக்கு சற்று குழப்பமான நிலைமை தென்படும். மாணவமணிகள்
எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 2. 

சந்திராஷ்டமம்: 1,2.


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். பணப்புழக்கத்திற்குக் குறைவு ஏற்படாது. பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இருப்பினும் மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளையும் எடுப்பீர்கள். 

அரசியல்வாதிகள் நிதானமாக பேசவும். குறிப்பாக, மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் சிறப்பாகப் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாரகவே இருக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். 

மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.  

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30,2. 

சந்திராஷ்டமம்: 3,4.


மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் இருந்த சிரமங்கள் குறையும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு கூடத்தொடங்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும். கடுமையாக முயற்சி செய்து மேலும் முன்னேற நினைப்பீர்கள்.  

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றும். கட்சித் தலைமையுடன் மோதல், வாக்கு வாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கத் தாமதமாகும். பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவரின் உடல்நலத்தில் பாதிப்புகளும் உண்டாகலாம். 

மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் இருந்து  வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 29,3. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல்கள் விலகும். வருமானம் அதிகரிக்கத் தொடங்கும் என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் அலட்சியப்படுத்தினாலும் குடும்பத்தில்
அமைதி குறையாது. குடும்பத்துடன் புனிதப் பயணம் செய்து மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு செயலாற்றுவீர்கள். மேலதிகாரிகளின் மனஸ்தாபத்திற்கு ஆளாகாமல் நடந்து கொள்ளவும். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டு பிரிய நேரிடலாம். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் பலனடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தேடிப் பெறுவீர்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு
உதவிகரமாக இருப்பார்கள். பெண்மணிகள் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டு தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். மதிப்பெண்களைப் பெற அதிகமாக உழைக்க வேண்டிவரும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 3,4.

சந்திராஷ்டமம்: இல்லை.


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றகரமான சூழ்நிலை தென்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். ஷேர் மார்க்கெட் போன்ற
ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக லாபம் கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்ள
வேண்டாம். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளிப்போடுவது நல்லது. விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய
ஒப்பந்தங்களைச் செய்து வருமானத்திற்கு வித்திடுவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த வாரம் நல்லது கெட்டது கலந்து வரும். 

மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைஅள்ளுவீர்கள். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30,4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com